Skip to main content

சேலம் 'சிறை பறவைக்கு' மீண்டும் குண்டாஸ்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

எத்தனை முறை கைது செய்து சிறையில் அடைத்தாலும், ஜாமினில் வெளியே வந்தபோதெல்லாம் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சிறைப்பறவையை இரண்டாவது முறையாக சேலம் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


சேலம் மணியனூர் பொடாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவருடைய மகன் பிரகாஷ் (28). இவர், கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், நெத்திமேட்டு பகுதியில் கணவரை பிரிந்து வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி, தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

salem district illegal activities person arrested in police goondas act


விசாரணையில், 20.11.2017ம் தேதி, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே ஒருவரை மிரட்டி செல்போன் பறித்த வழக்கும், 9.7.2018ம் தேதி, பொடாரன்காட்டில் டேவிட் என்பவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கும், 22.10.2019ம் தேதி, அல்லிக்குட்டை காலனியில் மணிகண்டன் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற வழக்கும் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. இவ்வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், ஜாமினில் விடுதலை ஆகி வெளியே வந்தபோதெல்லாம், மீண்டும் மீண்டும் அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்தது.


தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பிரகாஷை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிடம் கடந்த 18ம் தேதி நேரில் சார்வு செய்யப்பட்டது. இவர், ஏற்கனவே 2017ம் ஆண்டில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாகவும ¢குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.