Skip to main content

சேலம் மாநகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

salem district government officer house police raid

 

சேலம் மாநகர நல அலுவலர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகார்களின்பேரில் அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஏப். 16) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாநகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகர் நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் பார்த்திபன். இவருடைய குடியிருப்பு, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ளது.

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பார்த்திபன் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, இன்று காலை 08.00 மணியளவில், அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

 

ஆய்வாளர் தங்கமணி தலைமையில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது. சேலம் மாநகரில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிளினிக்குகள் சுகாதாரத்துறை விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நகர் நல அலுவலருக்கு கையூட்டு கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

 

சேலம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்ததாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் முறைகேடு நடந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் கணக்கிட்டுதான் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

மருத்துவர் பார்த்திபன், ஏற்கனவே கடந்த 2017- ல் மதுரை மாநகராட்சியில் நல அலுவலராகப் பணியாற்றியுள்ளார். அப்போது மருந்துகள் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வந்த புகார்கள் குறித்தும் அம்மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மாநகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் நடத்திய திடீர் சோதனை, மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.