Skip to main content

சேலம் மாநகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

salem district government officer house police raid

 

சேலம் மாநகர நல அலுவலர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகார்களின்பேரில் அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஏப். 16) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாநகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகர் நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் பார்த்திபன். இவருடைய குடியிருப்பு, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ளது.

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பார்த்திபன் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, இன்று காலை 08.00 மணியளவில், அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

 

ஆய்வாளர் தங்கமணி தலைமையில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது. சேலம் மாநகரில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிளினிக்குகள் சுகாதாரத்துறை விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நகர் நல அலுவலருக்கு கையூட்டு கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

 

சேலம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்ததாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் முறைகேடு நடந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் கணக்கிட்டுதான் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

மருத்துவர் பார்த்திபன், ஏற்கனவே கடந்த 2017- ல் மதுரை மாநகராட்சியில் நல அலுவலராகப் பணியாற்றியுள்ளார். அப்போது மருந்துகள் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வந்த புகார்கள் குறித்தும் அம்மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மாநகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் நடத்திய திடீர் சோதனை, மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.