Skip to main content

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் வசூல் வேட்டை; ஒப்பந்த ஊழியர்கள் இருவர் டிஸ்மிஸ்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வசூலித்துக்கொண்டு சிகிச்சை அளித்ததாக தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6000- க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சேலம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.

salem district government hospital two employees suspend

சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அதேவேளையில், போதிய செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால், மருத்துவ சேவைகளை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


இதற்காக மருத்துவமனை பணியாளர் பிரிவில் நிலவும் காலியிடங்களை நிரப்ப, பத்மாவதி என்ற நிறுவனத்தின் மூலம் பாதுகாவலர்கள், வார்டு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் துப்புரவு மற்றும் பாதுகாவல் பணிக்கு மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், சிலர் மருத்துவர்கள், செவிலியர்களைப்போல் நோயாளிகளுக்கு வென்பிளான் ஏற்றுவது, கட்டு கட்டுவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.


இவர்களில் சிலர், ஏழை நோயாளிகளிடம் பணம் வசூலித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு பத்மாவதி நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்களான பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (27), சேலம் குகையைச் சேர்ந்த நடராஜ் (34) ஆகிய இருவரும் நோயாளிகளிடம் பணம் வசூலித்துக்கொண்டு சிகிச்சை குளுக்கோஸ் ஏற்றும் காட்சிகள் அடங்கிய காணொலிப்பதிவு ஒன்று, சமூக ஊடகங்களில் பரவியது.


இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் விசாரணை நடத்தியதில், மேற்சொன்ன இருவர் மீதான புகாரும் உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் உடனடியாக செவ்வாய்க்கிழமை (பிப். 11) பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.