Skip to main content

குடிபோதையில் தகராறு: தந்தையை கடப்பாரையால் அடித்துக்கொன்ற மகன்!!!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

salem district father, son police investigation

 

சேலம் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறின்போது தந்தையையே மகன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி பெருமாள் கோயில் காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ராஜ்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 

 

ராஜ்குமார் தினமும் மது குடித்துவிட்டு போதையில் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

 

இதையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர். நவ. 23-ஆம் தேதி இரவு, அப்பா, மகன் இருவருமே மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். இரவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், திடீரென்று வீட்டில் இருந்த கடப்பாரையால் தன் தந்தையை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த முருகன் அங்கேயே உயிரிழந்தார். போதையில் இருந்த ராஜ்குமார், தந்தையை கொன்றுவிட்டோம் என்ற பதற்றமே இல்லாமல் அவரும் சம்பவ இடத்திலேயே தூங்கியுள்ளார். 

 

நவ. 24- ஆம் தேதி காலை போதை தெளிந்து, தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜ்குமார், தந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

சேலம் ஊரக காவல்துறை டி.எஸ்.பி. உமாசங்கர், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இந்த வழக்கில் ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் தான்தான் குடிபோதையில் தந்தை என்றும் பாராமல் கடப்பாரையால் அடித்துக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரையையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.