Skip to main content

உடன்படாத மருமகள்... உயிரை எடுத்த மாமனார்!

Published on 20/02/2020 | Edited on 27/02/2020

சேலம் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை மாமனார் கோடரியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (48). சொக்கநாதபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமுதா (45). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உலிபுரத்தில் தனக்குச் சொந்தமான தோட்டத்திலேயே வீடு கட்டி அறிவழகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை தந்தை பழனி (63), தாய் தொட்டம்மாள் ஆகியோர் மட்டும் ஊருக்குள் தனியாக ஒரு வீட்டில் இருக்கின்றனர். 

 

salem district  father in law incident police investigation

 

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 18) காலை அறிவழகன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். அன்று மதியம், தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு நேரில் சென்ற அறிவழகனின் தந்தை பழனி, தனது மருமகளை கோடரியால் வெட்டிக் கொன்று விட்டதாகக் கூறி சரணடைந்தார். மருமகளின் சடலம் அவருடைய தோட்டத்து வீட்டில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே, அமுதா தலை, கை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் கோடரியால் வெட்டப்பட்ட நிலையில், அமுதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். 

அமுதாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த பழனியை காவல்துறையினர் கைது செய்தனர். பழனி காவல்துறையில் அளித்த வாக்குமூலம்:

என்னுடைய மருமகள் அமுதாவை அடைய வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை இருந்து வந்தது. இதுபற்றி பலமுறை அவரிடம் நேரிலும் சொல்லி விட்டேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அவர் பிடிகொடுக்காமல் ஒதுங்கி ஒதுங்கிப் போனார். இதற்கிடையே, அவருக்கு வேறு ஒருவருடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அதை நான் நேரிலும் பலமுறை பார்த்து இருக்கிறேன். எனக்கு மட்டும் ஒத்துழைக்க மறுக்கிறாளே என்று ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பவத்தன்று தனியாக இருந்த அமுதாவை அடைய முயற்ச்சித்தேன். திமிறிக்கொண்டு விலகிச் சென்றதோடு, கூச்சல் போட்டு ஊரைக் கூட்டி விடுவேன் என்றும் மிரட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த கோடரியால் அவரை கண்மண் தெரியாமல் வெட்டிக் கொன்றேன். அதன்பிறகுதான் பெண்ணாசையில் தப்பு செய்துவிட்டோமே என்று நினைத்து சரணடைந்தேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து பழனியை ஆத்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.