Skip to main content

பாக்கெட் சாராயம் கடத்தல்; ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட 4 பேர் கைது!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


சேலம் அருகே, மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் கடத்தியதாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் இரண்டு பேர்  உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

கரோனா வைரஸ் பரவல் அபாயத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்கள், மது பிரியர்கள் கள்ளச்சாராயம் உள்ளிட்ட மாற்று வழிகளில் மதுவை நாடத் தொடங்கி உள்ளனர். 
 


சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மாமாஞ்சி சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை செய்தபோது, பாக்கெட் சாராயம் இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 

salem district border police panchayat president four persons arrested


வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் வீரபாண்டி அருகே உள்ள ராக்கிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (39), குமார் (47), எட்டிமாணிக்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் (47), ரெட்டியூரைச் சேர்ந்த இளவன் (39) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 
 

http://onelink.to/nknapp


இவர்களில் கிருஷ்ணனும், சண்முகமும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்பதும், இளவன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது. கைதான நான்கு பேரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இவர்கள், தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலனூர் பகுதியில் இருந்து கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி வருவதாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.