Skip to main content

சாலை இருக்கு..ஆனால் இல்லை!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

சேலம் மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் முக்கிய பகுதிகளில் ஒன்றான அம்மாப்பேட்டை பகுதியில் 'தியாகி அருணாச்சலம் தெருவில்' பாதி அளவு தார் சாலைகளும் , மீதமுள்ள சாலைகள் மண் சாலைகளாக உள்ளன. இந்த மண் சாலையானது கிட்டத்தட்ட 10 ஆண்டிற்கு மேல் இதே நிலையே காணப்படுகிறது. இந்த பகுதியானது சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. ஆனால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தான் வெற்றிப் பெற்ற பின்பு இந்த தெருவில் வசிக்கும் மக்களை சந்திக்க வரவே இல்லை. இவர்கள் வசிக்கும் தெருவிற்கு தார் சாலைகளை அமைத்து தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வளர்ச்சி மேம்பாடு நிதி ஆண்டுதோறும்  தமிழக அரசால் ஒதுக்கப்படுகிறது. அதே போல் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 100 கோடியை மத்திய அரசு தமிழக அரசுக்கு விடுவித்தது. அத்தகைய நிதி என்ன ஆனாது? தமிழக அரசு ஒதுக்கிய நிதி தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மக்களுக்காக செலவிடுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

 

SALEM

 

 

இந்த தெருவில் நேற்று பெய்த மழையால் மழைநீர் மற்றும் கழிவு நீர் இரண்டும் கலந்து சாலையில் செல்கிறது. மழைநீர் சாலையில் தேங்குவதால் தெருவில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த தெருவில் வீடுகளைக் கட்டியவர்கள் சிலர் தெரு நிலத்தையும் ஆக்கிரமித்துக் கட்டியுள்ளனர். அதனாலும் தெருவில் சாலை அமைப்பது தடைப்பட்டுள்ளது. தெருவை ஆக்கரமித்தவர்கள்  நீதிமன்றம் மூலம் சாலை அமைக்கவோ, ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு தடை ஆணையும் பெற்றுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் , சேலம் மக்களவை தொகுதி உறுப்பினர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர்கள் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. சேலம் மாநகரத்தில் வளர்ந்து வரும் முக்கிய பகுதிகளில் ஒன்று அம்மாப்பேட்டை. அத்தகைய பகுதியிலேயே அடிப்படை வசதிகளான சாலை மற்றும் சாக்கடை வசதிகள் இல்லாத இருக்கும் நிலையில், மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது? இது தொடர்பாக சேலம் மாவட்ட நிர்வாகம் , தமிழக முதல்வர் உடனடியாக  நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு இந்த தெருவில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.