Skip to main content

சேலத்தில் 11 வட்டாட்சியர்கள் திடீர் இடமாற்றம்!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

salem district 11 officers transfer collector order


சேலம் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, 11 வட்டாட்சியர்கள் நிலையிலான அதிகாரிகளைத் திடீரென்று இடமாற்றம் செய்து ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட வழங்கல் துறை பறக்கும்படை சிறப்பு வட்டாட்சியராக இருந்த அழகிரிசாமி, சேலம் மேற்கு சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். 

 

சேலம் வட்ட வழங்கல் அலுவலர் குமரன், ஆட்சியர் அலுவலக சிரஸ்தார் (நீதியியல்) பிரிவுக்கும், அங்கிருந்த சண்முகவள்ளி சந்தியூர் ஆட்டையாம்பட்டி கலால் மேற்பார்வை அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 
 

salem district 11 officers transfer collector order


ஆத்தூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த அன்புச்செழியன், ஆத்தூர் வட்டாட்சியராகவும், அங்கிருந்த பிரகாஷ், சேலம் வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டனர். 

 

சேலம் மேற்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக இருந்த சபியுன்னிஸா, ஆத்தூர் நில எடுப்புப்பிரிவு (என்.ஹெச். 68) வட்டாட்சியராக மாற்றப்பட்டார். ஆத்தூர் சிறப்பு வட்டாட்சியர் ஜெயந்தி, ஆத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு வட்டாட்சியராகவும், அங்கிருந்த ஜெயவேலு, ஆத்தூர் சிறப்பு வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டனர். 

 

மேலும், ஆத்தூர் முத்திரைத்தாள் சிறப்பு வட்டாட்சியரான கோவிந்தராஜன், ஆத்தூர் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். மேட்டூர் சிறப்பு வட்டாட்சியர் வாசுகி, சேலம் தெற்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், அங்கிருந்த சித்ரா, ஆத்தூர் முத்திரைத்தாள் சிறப்பு வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.