Skip to main content

சேலத்தில் 46,487 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்! ஹேண்ட் சானிடைசர்... முகக்கவசம்... விரிவான ஏற்பாடுகள் தயார்!!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

salem district 10th, 11th, 12th  board exam students


தமிழகத்தில் வரும் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இப்பொதுத் தேர்வை 46,487 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வர்கள், ஆசிரியர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கவும், ஹேண்ட் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
 


கரோனா தொற்று அபாயம் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் மாதமே நடத்தி முடித்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வரும் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வுகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில், வெள்ளியன்று (ஜூன் 5- ஆம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் கூறியது:

கரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 15.6.2020 அன்று தொடங்கி ஜூன் 25- ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் 26- ஆம் தேதியன்று நடைபெற இருந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு வரும் 16- ஆம் தேதி நடத்தப்படும். கடந்த மார்ச் 24- ஆம் தேதியன்று நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில், கலந்து கொள்ளாத தேர்வர்களுக்கு மட்டும் வரும் 18- ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் 532 பள்ளிகளில் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளிகள் மூலம் 22,730 மாணவர்கள், 22,332 மாணவிகள் என மொத்தம் 45,062 பேர் எழுதுகின்றனர். இவர்களுடன் தனித்தேர்வர்களாக நேரடியாக 1,425 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 46,487 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வை 36,686 மாணவர்களும், பிளஸ்-2வில் பொதுத்தேர்வை 1,592 பேரும் எழுதுகின்றனர்.

இத்தேர்வுக்கு 531 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 531 துறை அலுவலர்கள், 5859 அறைக் கண்காணிப்பாளர்கள், 793 நிலையான படையினர், 272 சொல்வதை எழுதுபவர், 31 வழித்தட அலுவலர்கள், 28 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 579 ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பிளஸ்-1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு அனைத்து அரசு, நிதியுதவி பெறும், சுயநிதி பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்படும். அதனால் தேர்வர்கள், அவரவர் படித்த பள்ளியிலேயே தேர்வுகளை எழுதலாம். ஏற்கனவே தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் துணைத்தேர்வு மையங்களாகவும் செயல்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 160 முதன்மைத் தேர்வு மையங்கள், 372 துணைத்தேர்வு மையங்கள் என 532 தேர்வு மையங்கள் மற்றும 56 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ்&1, பிளஸ்&2 பொதுத்தேர்வுக்கு 127 முதன்மைத் தேர்வு மையங்கள், 195 துணைத்தேர்வு மையங்கள் என 322 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
 

 

 


தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதிகள், ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கும் விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகள் வரும் 11- ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் சமூக இடைவெளியோடு தேர்வுகள் நடத்திடும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 10 தேர்வர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

தேர்வு அறையில் மாணவர்கள், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீளப்பயன்படுத்தக் கூடிய வகையிலான முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும். தேர்வு மையங்கள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருப்பின், மாற்று மையங்கள் அமைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்புத்தேர்வு மையம் அமைக்கப்படும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் அவர்களின் அடையாள அட்டை, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அடிப்படையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்க தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையத்திற்கு வரும்போது கைகளை சோப்பு அல்லது ஹேண்ட் சானிடைசர் போட்டு சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களை தேர்வு மையத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட தனி அறையில் அமர வைத்து தேர்வெழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு நாளும் தேர்வு தொடங்குவதற்கு முன்பு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள், தேர்வுப்பணி நடக்கும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை, நாற்காலி, இருக்கைகள், கைப்பிடிகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுதும் பொருட்டு, சொந்த ஊருக்கு வரும் மாணவர்கள் அடையாள அட்டை அல்லது தேர்வு அனுமதிச்சீட்டை காண்பிக்கும் பட்சத்தில் அம்மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், பாதுகாவலர்கள் மின்னணு அனுமதிச்சீட்டு இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள அவர்களுடைய சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர். அதேபோல், அடையாள அட்டையைக் காண்பிக்கும் பட்சத்தில், மின்னணு அனுமதிச்சீட்டு இல்லாமலேயே வெளியே இருந்து வரும் தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
 

http://onelink.to/nknapp


தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் புதிதாக தேர்வு நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள், தங்களது பள்ளித் தலைமை ஆசிரியரை அணுகியும் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்விரு வழிமுறைகளிலும் தேர்வு நுழைவுச்சீட்டை பெற இயலாதவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். 

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும், வெளியூர்களில் இருந்து வந்துவிட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச்சீட்டு பெற அழைக்காமல், அவர்களை நேரடியாகத் தேடிச்சென்று நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதாப்சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.