Skip to main content

மகன் திட்டியதால் 1.49 லட்சம் ரொக்கத்துடன் ஊர் ஊராக சுற்றிய முதியவர்; காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

சேலம் அருகே, மகன் திட்டியதால், 1.49 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் எங்கு செல்வது என்று தெரியாமல் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்த 70 வயது முதியவரை மீட்ட இளைஞர், காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.


சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் உள்ள முனியப்பன் காடு தோப்புக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் நீண்ட நேரமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (27) என்ற இளைஞர், அந்த முதியவரை பிடித்து பெயர், ஊர் விவரங்களை விசாரித்துள்ளார். அதற்கு அவர் தன்னுடைய பெயர் தைலப்பன், 70 வயதாகிறது என்று கூறினார். ஆனால் ஊர் பெயரைக் கேட்டதற்கு மட்டும் தர்மபுரி என்றும், பிறகு ஆட்டையாம்பட்டி என்றும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

salem district 1.49 lakhs old man round up younger police


இதையடுத்து ஆனந்தன், அந்த முதியவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். ஆய்வாளர் குணசேகரன், எஸ்ஐ வெங்கடாசலம் இன்னும் சில காவலர்கள் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் முதியவரிடம் விசாரித்தபோது, அவர் பெயர் தைலப்பன் என்பது ஊர்ஜிதமானது. அவருடைய சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அனுமந்தீர்த்தம் என்பதும் தெரிய வந்தது.


அவருக்கு ஒரு மகனும், ராஜேஸ்வரி (45) என்ற ஒரு மகளும் உள்ளனர். தைலப்பன் தனக்குச் சொந்தமான நிலத்தை அண்மையில் விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை மகன், மகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக, ஒரு பங்கு பணத்தை வங்கியில் செலுத்தாமல், தானே ரொக்கமாக வைத்திருந்திருக்கிறார். சேலம் வந்ததற்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. மகளை, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பாப்பாரப்பட்டியில்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 


நிலம் விற்றதன் மூலம் கிடைத்த 1.49 லட்சம் ரூபாயை லுங்கியில் கற்றை கற்றையாக சுருட்டி வைத்துக்கொண்டு, ஊர் ஊராகச் சுற்றி உள்ளார். பாப்பாரப்பட்டியில் உள்ள மகளையும் பார்க்க வந்துள்ளார். இதையறிந்த அவருடைய மகன், தந்தையை திட்டியதால், கோபித்துக்கொண்டு மகள் வீட்டுக்குச் செல்லாமல், அதேநேரம் ஊருக்கும் செல்ல மனமில்லாமல் அரியானூர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போதுதான் ஆனந்தன் என்ற இளைஞர் அவரை மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்திருப்பது தெரிய வந்தது.


அதைத் தொடர்ந்து மகள் ராஜேஸ்வரிக்கு தகவல் அளித்த காவல்துறையினர், அவரை ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் நடந்த விவரங்களைச் சொல்லி, ராஜேஸ்வரியிடம் தைலப்பனை ஒப்படைத்தனர். அவருக்கு அறிவுரை கூறி மகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை மீட்டு பொறுப்பாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர் ஆனந்தனை காவல்துறையினர் பாராட்டினர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.