Skip to main content

அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை!!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


சேலத்தில் அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார்.

சேலத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ராமன் வெள்ளிக்கிழமை (ஏப்.10) ஆலோசனை நடத்தினார்.
 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகைப்பொருள்கள், காய்கறிகள், பழங்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

 

salem collector raman meeting coronavirus prevention discussion with officers


கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக தனிமனித சுகாதாரம், தனிமைப்படுத்துதல், சமூக விலகல் போன்றவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 144 தடை உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களை, ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஒரே நேரத்தில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். 144 தடை உத்தரவை மீறி, தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் மொத்த விற்பனையாளர்கள் தங்களுடைய சரக்குகளை எடுத்து வருவதற்குத் தேவையான வாகன அனுமதியும், பணியாளர்களுக்கான அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி எடுத்து வர மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி அளித்துள்ளது.

அதேபோல் காய்கறிகள், பழங்கள், பூக்களின் மொத்த வியாபாரிகளையும், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கும் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
 

http://onelink.to/nknapp



விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட விளைபொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து வருவதற்கும் தேவையான வாகன வசதிக்கான அனுமதியும் மாவட்ட நிர்வாகம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கொள்முதல் செய்யப்படும் பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அப்பொருள்களுக்கான விலைப்பட்டியல்களை ஒவ்வொரு கடைகளிலும் கட்டாயம் வைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வைத்து பாதுகாத்துக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் ஒரு வார காலத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கிச்செல்ல முன்வர வேண்டும். நாள்தோறும் வாங்க வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். 

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்கி இருந்த பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக பொதுமக்கள் அதிகம் நடமாடுவதைத் தடுக்கும் விதமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அப்பகுதியில் உள்ள மக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அவரவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கிடைப்பதற்காகத் தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்டவற்றின் சார்பில் நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குறைந்த விலையில் 100 ரூபாய்க்கு காய்கறிகள், 60 ரூபாய்க்கு பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
 

பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கும், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுத்திட சமூக விலகலை முழுமையாக பின்பற்றிட வேண்டும். 

மேலும், 144 தடை உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்கும் விதமாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்ல வருபவர்களின் வாகன பயன்பாட்டினை குறைக்கும் விதமாகவும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வண்ணம் தீட்டப்பட்டு, அந்த வண்ணம் உடைய வாகனங்கள் மட்டும் அந்தந்த நாளில் வாரத்திற்கு ஒருமுறை அனுமதிக்கப்படுகிறது என சேலம் மாநகர காவல் ஆணையர் இங்கே விளக்கி உள்ளார். 
 

http://onelink.to/nknapp



இந்த நடைமுறை அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்வோருக்கோ, உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள் கொண்டு வரும் விவசாயிகளுக்கோ பொருந்தாது. மேலும், வேளாண்மைத் துறையின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொண்டு வருவதற்கு தினமும் வந்து செல்லலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்தார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.