Skip to main content

இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா...

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

salem childrens incident business man arrested ammapet police

 

 

சேலம் அருகே, இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான தொழில் அதிபருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 13 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பேய் பிடித்திருக்குமோ என்று கருதிய பெற்றோர், சிலரின் ஆலோசனையின்பேரில் நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தைச் சேர்ந்த மந்திரவாதி சேகர் என்பவரிடம் தாயத்து மந்திரித்துக் கட்டிவருவதற்காக கடந்த வாரம் சிறுமிகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் சென்றுள்ளனர்.

 

அப்போது மந்திரவாதி சேகர், சிறுமிகளை பேய் பிடித்திருப்பதாகவும், சில நாள்கள் அவர்களுக்கு இரவு நேரத்தில் ரகசிய பூஜைகள் செய்து பேய் ஓட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி மகள்களை அங்கேயே விட்டுவிட்டு பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பேய் ஓட்டுவதாகக் கூறி மந்திரவாதி சேகர், சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சேகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரித்தபோது, சேகருக்கு முன்பே சேலம் அருகே தொழில் அதிபர் ஒருவரும் அவர்களை நாசப்படுத்தி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (42). சேலத்தை அடுத்த சுக்கம்பட்டியில் தங்கியிருந்து குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வந்தார். அத்துடன் மாட்டுத்தீவன விற்பனையும் செய்து வந்தார். 

 

இவருடைய தோட்டத்தில் மேற்படி சிறுமிகளும், அவர்களுடைய பெற்றோரும் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர். அப்போது சிறுமிகள் இருவரையும் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் பல மாதங்களாக ரவீந்திரன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

 

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் ரவீந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்படுவற்கு முன்பு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.