Advertisment

8 வழி பசுமைச் சாலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு!

salem to chennai 8 roads supreme court

Advertisment

சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை அனுமதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஏற்கெனவே சென்னை - சேலம் இடையே உள்ளமூன்று நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம். புதிதாக விலை கொடுத்து நிலம் கையகப்படுத்த தேவையில்லை, புதிய திட்டம் தேவையில்லை. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை அனுமதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என கோரியுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

salem to chennai eight way road Supreme Court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe