Skip to main content

சேலம் கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் தண்டனை

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Salem call taxi driver case life sentence for two

 

சேலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மணியனூர் பாண்டு நகரைச் சேர்ந்தவர் அபிஷேக்மாறன் (29). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். தனக்குச் சொந்தமான மூன்று கார்களையும், தான் வேலை செய்து வந்த டிராவல்ஸ் நிறுவனத்திடமே வாடகை ஒப்பந்தத்திற்கும் விட்டிருந்தார். 

 

அபிஷேக் மாறனுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கருத்து வேறுபாட்டால் மனைவி குழந்தையுடன் தனியாக பிரிந்து சென்று விட்டார். அதையடுத்து அபிஷேக்மாறன் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரும் பிரிந்து சென்று விட்டார். 

 

இந்நிலையில் அபிஷேக்மாறன், தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் வசிக்கும் தன் நண்பன் பிரபாகரன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவருடைய மனைவியுடனும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில், பிரபாகரனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும், செல்போனிலும் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதையறிந்த பிரபாகரன், அபிஷேக்மாறனை எச்சரித்தார். ஆனாலும், அவர் செல்போன் மூலம் மீண்டும் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதைடுத்து, கடந்த 2020ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி, அபிஷேக் மாறன் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அன்று அதிகாலையில் அங்கு வந்த பிரபாகரனும், அவருடைய கூட்டாளியான எருமாபாளையத்தைச் சேர்ந்த அருள்குமார் (23) என்பவரும், அபிஷேக்மாறனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அபிஷேக்மாறனை கொலை செய்ததாக பிரபாகரன், அருள்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திங்கள்கிழமை (செப். 26) தீர்ப்பு அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.