Skip to main content

சேலத்தில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ; சமயோசித நடவடிக்கையால் 60 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

சேலத்தில், பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. எனினும், ஓட்டுநரின் சமயோசித நடவடிக்கையால் 60 பயணிகள் உயிர்ச்சேதமின்றி தப்பினர்.


சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சேலம் நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 60 பயணிகள் இருந்தனர். கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். 

salem bypass bus incident passengers , police

கந்தம்பட்டி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காலை 9.15 மணியளவில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று, பேருந்தின் முன்பக்கத்தில் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று 'குபுகுபு' வென்று கரும்புகை கிளம்பியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், உடனடியாக அவசர அவசரமாக சாலையின் நடுவிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி புகை வந்த இடத்தைப் பார்த்தார். பதற்றம் அடைந்த பயணிகளும் 'திபுதிபு' வென்று கீழே இறங்கினர். 


பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்த சாலையோரக் கடைக்காரர்கள் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். சிலர் மணலைக் கொண்டு வந்து கொட்டினர். ஆனாலும் தீ மேலும் கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. 


இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் மீது இருந்து பேருந்து மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ முற்றிலும் அணைந்தது. என்றாலும், பேருந்துக்குள் அனைத்து இருக்கைகளும் தீயில் நாசமாயின. 


ஓட்டுநர் கார்த்திக் சமயோசிதமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், பேருந்தும் முழுவதும் தீயில் நாசமாகாமலும் காப்பாற்றப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் கந்தம்பட்டி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.