Skip to main content

பாலியல் பலாத்கார வீடியோவில் சிக்கிய விசிக பிரமுகர் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சேலம் அருகே, ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பிரமுகர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


சேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இயங்கும் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன், இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் பொதுக்கழிப்பறையில் வாலிபர் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக வந்த புகாரின் பேரில் மோகன்ராஜை மகுடஞ்சாவடி காவல்துறையினர் கைது செய்தனர். 


அவருடைய செல்போனில் ஆய்வு செய்தபோது, பெண் ஒருவரை மோகன்ராஜ் மிரட்டியும், தாக்கியும் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருந்தன. அவர் கைது செய்யப்பட்ட அதேநாளில் பல்வேறு சமூக ஊடகங்களிலும் மோகன்ராஜின் பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகள் பரவின. எனினும், வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து புகார்கள் ஏதும் வராததால், மோகன்ராஜை ஓரினச்சேர்க்கை புகாரில் மட்டுமே கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

salem auto driver women complaint police  court


இதற்கிடையே, பாலியல் பலாத்காரம் சம்பவம் நிகழ்ந்த இடம், மாநகர காவல் சரகத்திற்குள் வருவதால், இந்த வழக்கை மகுடஞ்சாவடி போலீசார், கொண்டலாம்பட்டி போலீசாருக்கு மாற்றினர். இந்நிலையில் மோகன்ராஜின் காமப்பசிக்கு இரையான அந்தப்பெண், அக். 1ம் தேதியன்று கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், 'நான் ஹாலோபிரிக்ஸ் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தேன். திடீரென்று எனக்கு சரியாக வேலைகள் கிடைக்காமல் போகவே குடும்பம் நடத்த முடியாத அளவுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டது. அதனால், ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தப்பணத்தை கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் மோகன்ராஜ் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார்.


ஒருநாள் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் என்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறினேன். அவரோ, பணம் தர வேண்டாம். வீட்டிற்கு வந்து போ என்று கூறினார். அதனை நம்பி வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் எனது நெற்றியில் அடித்தார். பிறகு கொன்று விடுவதாக கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துவிட்டார்.  அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்து மிரட்டினார். நான் எப்போது கூப்பிட்டாலும் வந்துபோக வேண்டும். இல்லாவிட்டால் அழைக்கும்போது இந்த பாலியல் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அப்பெண்ணுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் சிறையில் இருக்கும் மோகன்ராஜிடம், அவரை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் இன்று (அக். 2) நேரில் சார்வு செய்தனர். ஓரிரு நாளில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.