Skip to main content

ஒருதலைக்காதல் விவகாரம்: வாலிபர் கொலையில் கட்டடத் தொழிலாளி கைது! 

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

arunkumar

                                                                    அருண்குமார்

தங்கை மீதான ஒருதலைக்காதலை கைவிட மறுத்ததால் இளைஞரைச் சரமாரியாகத் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளி ஒருவரை ஆத்தூரில் காவல்துறையினர் திங்கள்கிழமை (மே 18) கைது செய்தனர்.
 


சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அருண் என்கிற அருண்குமார் (19). பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார். 


கடந்த சனிக்கிழமை (மே 16) காலை 11.45 மணியளவில், அருண்குமார் ரேஷன் கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு அம்பேத்கர் நகர் லீ பஜார் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில், ஆத்தூர் மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சதீஸ் (22) என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் நண்பர் ஒருவருடன் வந்தார். 
 


அவர், அருண்குமாரை பார்த்தவுடன் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். நிலைகுலைந்து கீழே விழுந்த அருண்குமாரை நெஞ்சு, வயிற்றுப்பகுதியில் காலால் சரமாரியாக உதைத்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டதை அடுத்து, அருண்குமார் வீட்டுக்குச் சென்று விட்டார். சம்பவத்தன்று மாலையில் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (மே 17) உயிரிழந்தார்.


இதுகுறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சதீஸின் சித்தப்பா மகளைக் கொலையுண்ட அருண்குமார் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அதனால் தன் தங்கை மீதான காதலை கைவிடச்சொல்லி அருண்குமாரை தாக்கியதில், அவருக்கு மண்ணீரல் உறுப்பு சிதைந்துள்ளது. அதனால்தான் அவர் சிகிச்சை பலனின்றி இறந்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. 
 

sathish

                                                                           சதீஸ்
 

http://onelink.to/nknapp


கொலையாளி சதீஸ் கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விவகாரம் பெரிய அளவில் விசுவரூபம் எடுக்காமல் அமுங்கியது. காவல்துறையினர் சதீஸை தேடி வந்த நிலையில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆத்தூர் நகர காவல்துறையினர் கள்ளக்குறிச்சியில் வைத்து அவரை கைது செய்தனர். இதையடுத்து சதீஸ், ஆத்தூர் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.


இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.