Skip to main content

சேலம்: பாலியல் வழக்கில் சிக்கிய விசிக பிரமுகருக்கு 7 நாள் போலீஸ் காவல்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

சேலத்தில், ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியை காவல்துறையினர் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். இவர் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு வரவழைத்து, அவரை தாக்கியும், மிரட்டியும் பாலியல் வல்லுறவு கொள்ளும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த மாதம் பரவியது.

 

vck

 

மேலும், அவர் பல பெண்களை மிரட்டியே பாலியல் வல்லுறவு கொண்டதாகவும், அந்தக்காட்சிகளை வீடியோவாக படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டி அச்சுறுத்தி குறிப்பிட்ட சில பெண்களுடன் அடிக்கடி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோமோசெக்ஸ் புகாரின்பேரில் மகுடஞ்சாவடி காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்தனர்.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் பரவிய ஆபாச வீடியோவில் பதிவு செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாநகர காவல்துறை எல்லைக்குள் நடந்ததால், அந்த வழக்கு மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் இருந்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மோகன்ராஜ் பாலியல் வல்லுறவு கொண்டதாக சொல்லப்பட்ட மேகலா (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை தேடிப்பிடித்த காவல்துறையினர், அவரிடம் இருந்து எழுத்து மூலம் புகாரைப் பெற்றனர்.

 

vck

 

அந்தப் புகாரில் மேகலா, ''நான் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதனால் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், வறுமை காரணமாக குடும்பச் செலவுகளுக்காக மோகன்ராஜிடம் 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அந்தப்பணத்தை குறிப்பிட்ட தேதியில் தர முடியாமல் தாமதம் ஆனது. ஒருநாள் என்னை தன் வீட்டுக்கு அழைத்த மோகன்ராஜ், 2 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பித்தர தாமதம் ஆனதைச் சுட்டிக்காட்டி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீடியோவை பொதுவெளியில் பரப்பி விடுவேன் என்று சொல்லி அடிக்கடி என்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டார்,'' என்று கூறியிருந்தார்.

மேகலா அளித்த புகாரின்பேரில், மோகன்ராஜ் மீது பாலியல் வல்லுறவு, தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுதல் மற்றும் சைபர் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தது. ஏற்கனவே ஹோமோசெக்ஸ் புகாரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மோகன்ராஜை மேகலாவின் புகாரின்பேரிலும் கைது செய்தனர்.

 

vck

 

இந்நிலையில்தான், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி, சேலம் மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, வெள்ளிக்கிழமை (அக். 11) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் செந்தில்குமார், பாலியல் புகாரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மோகன்ராஜை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து மோகன்ராஜை காவலில் எடுத்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.