Skip to main content

சேலத்தில் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் போராட்டம்! வாலிபரை கடத்தி விட்டதாக புகார்!!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

 


சேலத்தில், சாதியைக் காரணம் காட்டி காதலனை அவருடைய பெற்றோரும், உறவினரும் கடத்திச்சென்று விட்டதாகக்கூறி, காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். 


சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (21). சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கல்லூரிக்கு தினமும் செல்லும் போதும், வரும்போதும் தன் வீடு அருகே வசிக்கும் தறித்தொழிலாளி பூபதி (27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மலர்ந்தது. 

 

s

 

கடந்த ஒன்றரை ஆண்டாக இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பல இடங்களில் காதலர்கள் ஜோடியாக சுற்றித்திரிந்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, கவுசல்யா தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு பூபதியிடம் கூறியுள்ளார். அதற்கு பூபதி, நாம் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நம் திருமணத்திற்கு என் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். நம் காதல் விவகாரம் அவர்களுக்கு தெரியும். அவர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகும், பலமுறை காதலனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.


பூபதி, கவுசல்யாவை சந்திப்பதையும் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி, கவுசல்யா தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, உயிர் பிழைக்க வைத்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பி கவுசல்யா, காதலனுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்நிலையில் பூபதி திடீரென்று மாயமானார். அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பூபதியை அவருடைய தாயார் சாரதா, அக்காள் கணவர் தனசேகரன் ஆகியோர் கடத்திச்சென்று விட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா? கொலை செய்துவிட்டனரா? எனத் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கவுசல்யா இன்று (ஆக. 31) மீண்டும் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், காதலன் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்திலும் ஈடுபட்டார். 


ஊர் மக்கள், உறவினர்கள் கவுசல்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் அவரிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். பின்னர் மாலையில் போராட்டத்தைக் கைவிட்டு வீட்டுக்குக் கிளம்பிச்சென்றார். இந்த சம்பவத்தால் எஸ்.நாட்டாமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.