Skip to main content

 கூலித்தொழிலாளிக்கு இன்ஸ்பெக்டர் பகிரங்க மிரட்டல்!! வீடியோ வைரல் ஆனதால் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பு

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

சேலத்தில் வழித்தட பிரச்னையில் புகார் கொடுக்க வந்த தொழிலாளி மீது, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பொய் வழக்கு போட்டு விடுவேன் என்று காவல் ஆய்வாளர் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

xx


சேலம் சாமிநாதபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தேவராஜன் (36). கூலித்தொழிலாளி. இவர் திங்கள் கிழமை (ஜூன் 17) காலை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு கொடுப்பதற்காக குடும்பத்துடன் வந்தார். திடீரென்று அவர் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் குடுவைகளை பிடுங்கி வீசி எறிந்தனர்.


அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தேவராஜனுக்கும் அவருடைய வீடு அருகே உள்ள ஒரு குடும்பத்தினருக்கும் வழித்தடம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருவதும், இது தொடர்பாக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருந்தபோது, பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல், அவர் மீது பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டியதும் தெரிய வந்தது.


மேலும் அவர், ஆய்வாளர் தன்னை மிரட்டியதாக செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஒரு காணொலிப்பதிவை காவல்துறையினரிடம் காண்பித்தார். 


அந்த காணொலி பதிவில், 'நாங்க நினைச்சா என்ன வேணும்னாலும் பண்ண முடியும். பேனை பெருச்சாளியாக்குவோம், யானையா கூட ஆக்குவோம். யானைய பேனாகவும் ஆக்குவோம். ஒரு சின்னப்புள்ளைய நீ கெடுத்துட்டதா உன் மேலேயே என்னால போக்ஸோ சட்டத்தின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்ய முடியும். இது கொலை வழக்கை விட கொடுமையானது புரிஞ்சுக்கோ,' என்று தேவராஜனை கடுமையாக மிரட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.


பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், ஆய்வாளர் சாலைராம் சக்திவேலை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர், 'புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் இப்படி மிரட்டி பேச வேண்டிய தேவையில்லை. இன்னொருமுறை இதுபோன்ற புகார் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்,' என்று அவரை எச்சரித்து அனுப்பினார்.


எனினும், கூலித்தொழிலாளி மீது பொய் வழக்கு போட்டு விடுவதாக ஆய்வாளர் மிரட்டிய காணொலி அனைத்து சமூக ஊடகங்களிலும் பெரிய அளவில் பரவியதால், காவல்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.