Skip to main content

கை கழுவுவதில் கின்னஸ் சாதனை படைத்த சேலம் மாவட்டம்

Published on 16/12/2018 | Edited on 17/12/2018
g

 

ஒவ்வொரு ஆண்டும் நுண்ணுயிர் நோய் தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் பலஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு பலியாகி வருகிறார்கள். இதை கட்டுப்படுத்தும் விதத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 15 ஆம் தேதி உலக கை கழுவும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

g

 

இந்த ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பெயரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன் ஒருங்கிணைப்பில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி உலக கை கழுவும் நாள் தினம் அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தும் முயச்சியில் கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன் வாடி மாணவர்கள் என அனைவரையும் ஒருங்கினைத்து நடத்தப்பட்ட கை கழுவும் நிகழ்ச்சியை ஒன்பது கேமராக்கள் மற்றும் இரண்டு ஜிம்மிஜிக்கி கேமரா செட்டப் மேலும் கிரேன் கேமரா உதவியுடன் ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 

மேலும் மாவட்டம் முழுவது 4024 பேர் இதில் பங்கு பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அங்கீகரித்த கின்னஸ் சாதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்து அங்கிகரித்து அதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழையும் வழங்கி கவுரவித்தது. கடந்த வியாழன் அன்று அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகினி மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன் மற்றும் ஊரகவளர்ச்சி துறையினரை முதல்வர் எடபாடி பழனிசாமி பாராட்டினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்லாம் இழந்த எலான்; குருவிக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட சோகம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Elon Musk Lost Russ 15 Lakh Crore For Last Year guinness Record

 

உலக அளவில் மிகப்பெரிய சரிவை சந்தித்து உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை கடந்த ஆண்டு தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதற்கான தொகையை செலுத்த தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளையும் விற்று வருகிறார் எலான். 

 

இந்நிலையில் 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்த எலானின் சொத்துமதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. இந்த மிகப் பெரிய சரிவையொட்டி உலக அளவில் பெரும் நஷ்டத்தை சந்தித்த மனிதன் என்ற வகையில் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 

 

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜப்பான் தொழிலதிபர் மசயோஷி சன் 58.6 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பைச் சந்தித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற நிலையில், தற்போது அவரின் சாதனையை எலான் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை... தேடி வந்த கின்னஸ் சாதனை!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

 84 year 84 years working in the same company ... Guinness record s working in the same company ... Guinness record

 

84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

 

ஆண்டுக்கணக்கில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதிலும் தனியார் துறைகளில் நீண்ட வருடங்கள் பணியில் இருப்பதென்பது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் 100 வயதை தொட்ட முதியவர் ஒருவர் அவருடைய வாழ்நாளில் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

 

 

 84 years working in the same company ... Guinness record

 

பிரேசிலின் புரூஸ்க்யூ நகரிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடைமட்ட ஊழியராக தனது பணியைத் தொடங்கி வால்டர் ஆர்த்மன் படிப்படியாக அந்த நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்று விற்பனை மேலாளர் என்ற இடத்தை அடைந்தார். 100 வயதிலும் அதே உற்சாகத்துடன் அவர் பணியாற்றி வருகிறார். பணியை உற்சாகமாக ஈடுபாட்டுடன் செய்தால் ஒரே நிறுவனத்தில் நீடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார் வால்டர்.