Sale of illegal liquor; 6 people including woman were arrested

Advertisment

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் மற்றும் கோபி போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட திங்களூர், மேற்குபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் (19), ஈரோடு, வீரப்பன் சத்திரம் பாவேந்தர் வீதியைச் சேர்ந்த மனோகரன் (43), சித்தோடு மரவபாளையத்தைச் சேர்ந்த பொன்னி (36), மாரக்காபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (38), அந்தியூர், முத்துகுமாரசாமி வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (44), ஈரோடு, காசிபாளையத்தைச் சேர்ந்த பாப்பண்ணன் (55) ஆகிய 6 பேர் மீதுவழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 38 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.