Skip to main content

காந்தி ஜெயந்தியில் மது விற்பனை... காந்தியவாதிகள் கண்டனம்

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

Sale of alcohol on Gandhi Jayanti... Gandhian condemned

 

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் மதுபான கடைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் அரசு உத்தரவிட்டிருந்தது. சமூக நல்லிணக்கன உறுதிமொழி, மதுவுக்கு எதிரான கோஷங்களை முன்னெடுத்து பல்வேறு அமைப்புகள் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் வாயிலில் 2 டாஸ்மாக் கடைகளின் வெளியே இன்று சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் விற்பனையாகின. மது அருந்துவோர் கூட்டம் கூட்டமாக கடைக்கு வழக்கம்போல் கடை திறந்திருக்கும் நேரத்தில் வருவது போல் அதிகாலையில் இருந்து  மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.  ஒரு பாட்டிலின் விலை ரூ 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தின் வாயிலில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதன் எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, கலால் துறை உள்ளிட்ட எந்த துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

மதுவுக்கு எதிராக போராடிய மகாத்மா பிறந்தநாளில் அரசு மது விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் கள்ளத்தனமாக காவல்துறை உதவியுடன் சுதந்திரமாக இதுபோன்று மது விற்பனை நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என காந்தியவாதிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதேபோல் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான இடங்களில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு இடங்களிலும் சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்த டாஸ்மாக் கடை பேருந்து நிலையம் அருகே உள்ளதால் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறுகிறது. இதனால் டாஸ்மாக் உள்ள சாலைவழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிப்படைகிறார்கள் எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.