Skip to main content

கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்ட அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

தேனி மாவட்டம், கம்பத்தில் கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்ட அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் பஸ்ஸில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

      தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் ஜெய மங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமலை இரண்டில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல மேலாளருக்கு கடிதம் ஒன்றை  அனுப்பினார். அதில் கம்பத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அதிகமாக வேகத்தடை வேக தடுப்பு கம்பிகள் இருப்பதாகவும் வழித்தடங்களில் போக்குவரத்து கழகம் ஒதுக்கிய நேரத்தில் சென்று வர முடியவில்லை. மேலும், எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி செய்வதால் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் இல்லையென்றால் கம்பத்திலிருந்து செம்பட்டி வரைதான் பஸ்சை இயக்குவேன் என்று கூறியிருந்தார். 

 

Bus Driver

இதற்கு அதிகாரிகள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த 26ஆம் தேதி கம்பத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பாலகிருஷ்ணன் பஸ்சை ஓட்டி சென்றவர், செம்பட்டி வரை சென்றுவிட்டு மீண்டும் கம்பத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரி, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை அவரிடம் கம்பம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் பாண்டியராஜன் வழங்கவில்லை.

       இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பாலகிருஷ்ணன் பணிக்கு வந்தார். பணிமலைகள் இருந்து பஸ்சை அவர் எடுக்க முயன்றார். உடனே அங்கு வந்த கிளை மேலாளர் பஸ்சை இயக்க கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்ஸில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு  இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.


 

இதையடுத்து பணிமனையில் நுழைவாயிலை மூடச்சொல்லி கிளை மேலாளர் உத்தரவிட்டார். இதன் காரணமாக பணிமனையில் இருந்து மற்ற பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்பந்தமாக  கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்   பொன்னிவளவன் தலைமையில் போலீசார் அங்கு வந்து பாலகிருஷ்ணன் பஸ்ஸை விட்டு இறங்க கூறினர். ஆனால் பஸ்சை விட்டு அவர் இறங்க மறுத்தார். 



இதையடுத்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கீழே இறக்கினார்கள். பின்னர் டிரைவர் பாலகிருஷ்ணனுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தங்களுடைய பிரச்சனைக்கு அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் போல பொன்னிவளவன் டிரைவர் பாலகிருஷ்ணனுக்கு அறிவுரை கூறினார். அதன் பின்பு தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் பணி மலையில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றன. இச்சம்பவத்தால் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Government bus driver suspended for insulting female passenger

பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி என்ற பகுதியில் பெண் பயணி ஒருவர் கைக்குழந்தையுடன் கூடலூர் செல்வதற்காகப் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அப்பெண்மனி, பேருந்தை நிறுத்த கைகாட்டியபோது ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வந்த மற்றொரு பேருந்தில் ஏறிப் பயணித்து பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பன்னீர் என்பவரிடம், ‘பேருந்தை ஏன் நிறுத்தவில்லை’ என அப்பெண்மணி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர், அந்தப் பெண்மணியை தரக்குறைவாகத் திட்டியதாகப் புகார் எழுந்தது. மேலும் பெண்ணை தரக்குறைவாக ஓட்டுநர் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பன்னீரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

Next Story

அரசு பேருந்து ஓட்டுநருக்கும் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் அடிதடி!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Govt bus driver and private bus driver beaten

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி நடந்து வருவதால் தற்காலிக பேருந்து நிலையம் கழுகுமலை இணைப்புச் சாலையில் இயங்கி வருகிறது. நேற்று(21.11.2023) மாலை அரசு பேருந்து ஒன்று திருநெல்வேலி செல்வதற்காக மாலை 5.15 மணியளவில் புறப்பட்டது. அதே சமயம் தனியார் பேருந்து ஒன்றும் 5.25 மணியளவில் புறப்படுவதாக இருந்தது. 5.15 மணிக்கு அரசு பேருந்தை எடுத்த டிரைவர் குமார், அந்நேரம் ஒரு பயணிவர, அவரை ஏற்றிக் கொள்ள பேருந்தை நிறுத்தியுள்ளார். 

 

அது சமயம் தனியார் பேருந்து ஒட்டுநர் ராமர் அரசு பேருந்துக்கு முன்பாக அவரது பேருந்தை எடுத்துச் சென்று “இப்ப எங்க டைம், உங்களுக்கு டைம் முடிந்துவிட்டது” என்று புறப்படாமல் இருந்ததாக அரசு பேருந்து ஒட்டுநரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பிறகு அது கைகளால் தாக்கிக் கொள்ளும் அளவாக மாறியிருக்கிறது. அவர்கள் தாக்கிக் கொண்டதில் காலனிகளை எடுத்து தாக்கி கொண்டுள்ளனர். பதற்றமாக நீடித்த இத்தகராறால் பேருந்து நிலையம் களேபரமானது. டிரைவர்களின் தகராறை பொதுமக்கள் தடுத்தும் இரு தரப்பு தகராறும், வார்த்தைகளும் அடங்குவதாகத் தெரியவில்லை. இதனிடையே அரசு பேருந்து ஒட்டுநர் குமார் கீழே விழ அவரை மீட்ட போக்குவரத்து ஊழியர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

 

தொடர்ந்து மற்றப் பேருந்துகளை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அது சமயம் பேருந்து நிலையம் வந்த சங்கரன்கோவில் பணிமனை கிளை மேலாளர் குமார் மற்றும் தொமுச நிர்வாகிகள், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்தனராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றனர். இதையடுத்தே அனைத்து பேருந்துகளும் மீண்டும் இயக்கப்பட்டன. டவுன் போலீசார் சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஒட்டுநர் ராமரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பேருந்துகள் தரப்பட்ட நேரத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். தனியார் பேருந்துகள் விதியை மீறி செயல்படக் கூடாது. தற்காலிக பேருந்து நிலையத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்கிறார்கள் போக்குவரத்து பணியாளர்கள்.