Skip to main content

சேலம் - பூசாரி கழுத்து அறுத்து படுகொலை! போலீசார் விசாரணை!!

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

சேலம் அருகே, கோயில் பூசாரியை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலத்தை அடுத்த வலசையூர் சுந்தர்ராஜன் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (56). நெசவுத்தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு ஒரே மகள். அவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.


பாஸ்கரன், தனது வீட்டின் அருகில் சிறிய அளவில் காளியம்மன் கோயில் கட்டியுள்ளார். அந்தக் கோயிலின் பூசாரியாகவும் இருந்து வந்தார். 

 

salam


கடந்த 17.2.2019ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கரன் அதன்பின் வீடு திரும்பவில்லை. பவுர்ணமி நாள்களில் எங்காவது வெளியூர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு இரண்டு நாள்கள் கழித்துதான் பாஸ்கரன் வீடு திரும்புவாராம். இதனால் அவர் எங்காவது கோயில்களுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதிய அவருடைய மனைவி, அவரை எங்கேயும் தேடவில்லை.


இந்நிலையில், அரூர் பிரதான சாலையில் ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள காலி நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பாஸ்கரன் சடலமாகக் கிடந்தார். செவ்வாய்க்கிழமை காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து, வீராணம் காவல்நிலையத்துக்குக் தகவல் அளித்தனர். 


உதவி ஆணையர் தினகரன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்றனர். சடலத்தைப் பார்த்து அவருடைய மனைவி பத்மா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கதறி அழுதனர். காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சடலம் லேசாக அழுகிப்போய் இருந்தது. பாஸ்கரன், வீட்டில் இருந்து காணாமல் போன அன்றே கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. கழுத்தில் உள்ள காயம், கண்ணாடி சில்லுகளால் அறுக்கப்பட்டதுபோல் தெரிந்தது. 


காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்துக்கொண்டே சடலம் கிடந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் சென்று நின்று கொண்டது. கொலையாளிகள் அந்த வாழைத்தோட்டத்தில் நின்று சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் கருதுகின்றனர்.


கொல்லப்பட்ட பாஸ்கரன், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் காளியம்மன் கோயில் விழாக்களை நடத்தி வந்துள்ளார். பொதுமக்களிடம் நன்கொடைகூட வசூலிப்பது கிடையாது என்கிறார்கள். மேலும், எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.


பொதுமக்கள் இவ்வாறு கூறினாலும், சடலம் கிடந்த இடத்திற்கு பாஸ்கரன் வருவதற்கு என்ன காரணம்? ஒருவேளை மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு  சடலத்தை அந்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றார்களா? அல்லது பெண்கள் விவகாரம், கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏதும் அவர் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.