Advertisment

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!

Sahitya Akademi Award for Writer ambai

சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு (சி.எஸ்.லட்சுமி) 2021- ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதைக்காக அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலை எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.

Advertisment

எழுத்தாளர் அம்பை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960- ஆம் ஆண்டில் இருந்து எழுதி வருகிறார். வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

Advertisment

சாகித்ய அகாடமி விருது கிடைத்தது குறித்து எழுத்தாளர் அம்பை கூறுகையில், "சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வாசிப்பு எண்ணிக்கை குறைவு என்பதை விட வாசிப்பு முறை மாறியுள்ளது" என்றார்.

அதேபோல், 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' சிறுகதை தொகுப்பிற்காக மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

sakitya academy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe