Skip to main content

சகஜானந்தா 132வது பிறந்தநாள் விழா.. மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை! 

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Sakajananda 132nd Birthday Celebration .. District Collector, MLAs pay homage

 

சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் பள்ளிகளை நிறுவிய சுவாமி சகஜானந்தாவின் 132-வது பிறந்த நாளையொட்டி நந்தனார் ஆண்கள் பள்ளியின் வாயிலில் அவருக்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தில் வியாழக்கிழமை கடலூர் ஆட்சியர் (பொறுப்பு) ரஞ்சித்சிங் கலந்துகொண்டு சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 

இவருடன் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் நந்தனார் பள்ளிகளின் ஆசிரியர்கள், சிதம்பரம் முன்னாள் முனிசிபல் ஊராட்சி தலைவர் பத்மசுந்தரி உமாநாத், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நந்தனார் கல்வி கழக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராதகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள். சகஜானந்தா பணிநிறைவு பெற்றோர் சமூக பேரவையின் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சி.தண்டேஸ், வரநல்லூர் ஊராட்சி தலைவர் மாரியப்பன், சுவாமி சகஜானந்தா சமூக பேரவை மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். 

 

Sakajananda 132nd Birthday Celebration .. District Collector, MLAs pay homage

 

பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் மாணவர்களுக்குப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கபட்டது.  இதில் கலந்துகொண்ட அனைவரும் சுவாமி சகஜானந்தா புகழ் ஓங்குக எனக் கோசங்களை எழுப்பினார்கள் பின்னர் அனைவரும் பள்ளியின் கல்வி வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல் பள்ளியின் வாளத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

சுவாமி சகஜானந்தா 35 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் 7 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது கல்வி பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு மணி மண்டபம் கட்டியது என்பது குறிப்பிடதக்கது.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.