Skip to main content

“மருந்து குடித்து சாக வேண்டியது தான்” - பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டோர் பேட்டி

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

said a victim of Balveersingh; tirunelveli issue

 

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, “குற்றச்செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்டோர், “போராடிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நியாயமும் கிடைக்கவில்லை. சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை. நியாயம் கிடைக்கவில்லை என்றால் மருந்து குடித்து சாக வேண்டியது தான். நான் வந்து இரண்டு மணிநேரம் ஆகிறது. இன்னும் என்னை விசாரிக்கவில்லை. அவர்கள் எங்களிடம் விசாரித்தால் தான் எங்களால் சொல்ல முடியும். அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. 

 

கண்டீசன் பெயிலில் கையெழுத்து போட்டு வெளியில் வரும் வரை எங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. எங்களை அடித்ததோடு இல்லாமல் ஏன் எதற்கு என்று கூட கேட்கமாட்டேன் என்கிறார்கள். நாளை எங்களை உள்ளே பிடித்து அடித்து, இவர்கள் ஸ்டேசனுக்கே வரவில்லை என்று எங்களை கொலை செய்துவிட்டால் எங்களால் என்ன செய்ய முடியும். எங்கள் ஆறு பேருக்கும் சாத்தான்குளம் விவகாரம் மாதிரிதான் ஆகப்போகிறது என நினைக்கிறேன். எல்லோருக்கும் பல்லை பிடுங்கியுள்ளார்கள். நாங்கள் மூவரும் உடன்பிறந்த அண்ணன், தம்பிகள். ஒரே அறையில் ஜட்டியுடன் நிற்க வைத்து அடிக்கும் போது எங்களுக்கு எப்படி இருக்கும். நாங்களும் சாத்தான்குளம் மாதிரிதான். எங்களையும் கொலை செய்துவிட்டால் யாரும் கேட்க மாட்டார்களே. எங்களுக்கு பண பலம் கிடையாது. 

 

கேங் வார் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். எங்களைப் பார்த்தால் தீவிரவாதி போல் உள்ளதா. அன்றாடம் உழைக்கிறோம். ஷூ காலுடன் என் அண்ணனை நெஞ்சில் மிதித்தார்கள். எனக்கும் மிதித்தார்கள். அவரால் சாப்பிட முடியவில்லை. 3 வேளையும் ஜூஸ் மட்டும் தான் குடிக்கிறார். எங்களால் ஸ்கேன் கூட பண்ண முடியவில்லை. போதுமான வசதி இல்லை. சாத்தான்குளம் மாதிரி தான் எங்களுக்கும் ஆகப்போகிறது என நினைக்கிறேன்” எனக் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.