Skip to main content

தந்தையின் உயிரைக் காக்க மகன் செய்த தியாகம்..!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Sacrifice made by son to save father's life

 

தேனி அருகே உள்ள பழனிசெட்டியில் அறிஞர் அண்ணா தெருவில் வசிப்பவர் செல்வராஜ். இவர் அதே ஊரில் செல்ஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு சந்தன மாரியம்மாள் என்ற மனைவியும், அஜய் குல்சன், கமல் குல்சன் என்ற மகன்களும் உள்ளனர். அஜய் குல்சன் பி.எஸ்சி. நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துவந்தார். இரண்டாவது மகன் கமல் குல்சன், பி.எஸ்சி. நர்சிங் 2வது ஆண்டு படித்துவருகிறார்.

 

செல்வராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றபோதிலும் பாதிப்பின் தாக்கம் குறையாமல் மேலும் தீவிரம் அடைந்தது. பாதிப்பு முற்றிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்குப் பரிசோதனை செய்தபோது கல்லீரல் செயலிழந்துவிட்டதாகவும் அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அஜய் குல்சன் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்து, தனது முடிவை தாயிடம் கூறினார். ஆனால் அவர், மகனுக்குப் பதில் தானே கல்லீரல் தானம் கொடுப்பதாக தெரிவித்தார். அதன்படி சந்தனமாரியம்மாள் கல்லீரலில் பாதியை எடுத்து அவருடைய கணவருக்குப் பொருத்த டாக்டர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்தனர். ஆனால், அவர் கல்லீரலைக் கொடுத்தால் அவருக்கு கல்லீரல் மறுவளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், அதனால் இருவரின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி டாக்டர்கள் அந்த முடிவை நிராகரித்தனர்.

 

Sacrifice made by son to save father's life

 

அதன்பிறகு அஜய் குல்சன் தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய விரும்புவதாக டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் தானம் கொடுப்பதால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மூலம் முறையாக அனுமதி பெற்றனர். பின்னர் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அஜய் குல்சனின் கல்லீரலில் இருந்து 60 சதவீதம் எடுத்து அவருடைய தந்தைக்குப் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து செல்வராஜ் காப்பாற்றப்பட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இருவரும் நலமாக இருந்துவருகிறார்கள்.

 

இது சம்பந்தமாக அஜய் குல்சனிடம் கேட்டபோது, “எனது தந்தைக்கு மதுபழக்கம் எதுவும் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொண்டதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனது உடலில் இருந்து 60 சதவீதம் கல்லீரல் எடுத்து எனது தந்தைக்குப் பொருத்தப்பட்டது. தற்போது எனக்கு 80 சதவீத கல்லீரல் வளர்ச்சி அடைந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த 3 மாதங்களுக்குள் முழுமையாக வளர்ச்சி பெற்றுவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தந்தையின் சிகிச்சைக்கு ரூ. 40 லட்சத்துக்கும் மேல் செலவானது. உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள் செய்த உதவிகள் அறுவை சிகிச்சையை எளிதாக்கியது. ஆரோக்கியமாக இருக்கும் நபர் கல்லீரலை தானம் செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கல்லீரல் தானம் குறித்து மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.