Skip to main content

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாயடைத்து விடுவீர்கள்...!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

கேரளாவில் பிரசித்தி பெற்ற மிக முக்கிய கோவில் சபரிமலை ஐய்யப்பசாமி கோவில். இங்கு கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கா்நாடகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

 

 sabarimala-iyappan-temple-income

 



ஆண்டுத்தோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல மகர கால பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 16-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. அன்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருமுடி கட்டி ஐய்யப்பசாமியை தரிசித்து வருகின்றனா். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நேற்று 27-ம் தேதி நிறைவடைந்தது. இதை காண நேற்று சுமார் ஒரு லட்சம் பக்தா்கள் நேற்று குவிந்தனா்.

இது குறித்து திருவிதாங்கூா் தேவசம் போர்டு தலைவா் வாசு கூறும் போது, "இந்த ஆண்டு மண்டல பூஜை எந்தவித அசம்பாவிதங்களும், பிரச்சினைகளும், புகார்களும் இன்றி அமைதியாக நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தா்களின் வருகையும் வருமானமும் அதிகரித்துள்ளது.

மண்டல பூஜைக்காக கடந்த 39 நாட்களில் ரூ.156 கோடியே 60 லட்சம் வருமானம் வந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 51 கோடி அதிகமாகும். இதில் அரவணை மூலம் ரூ. 67 கோடியே 76 லட்சமும், அப்பம் மூலம் ரூ. 9 கோடியே 86 லட்சமும், பக்தா்களின் காணிக்கை மூலம் ரூ.53 கோடியே 14 லட்சமும் கிடைத்துள்ளது.

இதை தொடா்ந்து மகர கால பூஜைக்காக மீண்டும் வருகிற 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். இதற்காக அன்று மதியத்தில் இருந்து பக்தா்கள் பம்பையில் இருந்து மலையேற அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.