Skip to main content

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாயடைத்து விடுவீர்கள்...!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

கேரளாவில் பிரசித்தி பெற்ற மிக முக்கிய கோவில் சபரிமலை ஐய்யப்பசாமி கோவில். இங்கு கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கா்நாடகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

 

 sabarimala-iyappan-temple-income

 



ஆண்டுத்தோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல மகர கால பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 16-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. அன்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருமுடி கட்டி ஐய்யப்பசாமியை தரிசித்து வருகின்றனா். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நேற்று 27-ம் தேதி நிறைவடைந்தது. இதை காண நேற்று சுமார் ஒரு லட்சம் பக்தா்கள் நேற்று குவிந்தனா்.

இது குறித்து திருவிதாங்கூா் தேவசம் போர்டு தலைவா் வாசு கூறும் போது, "இந்த ஆண்டு மண்டல பூஜை எந்தவித அசம்பாவிதங்களும், பிரச்சினைகளும், புகார்களும் இன்றி அமைதியாக நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தா்களின் வருகையும் வருமானமும் அதிகரித்துள்ளது.

மண்டல பூஜைக்காக கடந்த 39 நாட்களில் ரூ.156 கோடியே 60 லட்சம் வருமானம் வந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 51 கோடி அதிகமாகும். இதில் அரவணை மூலம் ரூ. 67 கோடியே 76 லட்சமும், அப்பம் மூலம் ரூ. 9 கோடியே 86 லட்சமும், பக்தா்களின் காணிக்கை மூலம் ரூ.53 கோடியே 14 லட்சமும் கிடைத்துள்ளது.

இதை தொடா்ந்து மகர கால பூஜைக்காக மீண்டும் வருகிற 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். இதற்காக அன்று மதியத்தில் இருந்து பக்தா்கள் பம்பையில் இருந்து மலையேற அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.