style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சபரிமலையில் இன்று முழு அடைப்பு காரணமாக தமிழகத்திலுருந்து கோவை வழியாக கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்த நிலையில் இந்து அமைப்பினர் இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் செல்லவில்லை. கேரளாவில் இருந்தும் கோவைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
கோவையில் இருந்து குருவாயூருக்கு இன்று அதிகாலையில் இயக்கப்பட்ட ஒரே ஒரு பஸ்சும் பாதியில் நிறுத்தப்பட்டு உக்கடத்துக்கு திரும்ப வந்து விட்டது.