Skip to main content

பிரபல கோவிலில் எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்பு ஹோமம்; நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனை! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

SA Chandrasekar visit Thirukadayur temple

 

80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்.

 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், காலசம்கார மூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன், எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரம் அளித்த தளமாக விளங்குவதால் பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். மேலும் ஆயுள் விருத்திக்காக உக்ரரதசாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமண பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள். 

 

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து கொண்டார். எஸ்.ஏ. சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தனது மகன் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலர்களாக ஈடுபட வேண்டும்” - நடிகர் விஜய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Vijay People's Movement administrators should be involved as volunteers Actor Vijay

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர் துடைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை உதவி ஆணையர் ஷேக் மன்சூரின் 9791149789 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் பாபுவின் 9445461712 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் சுப்புராஜ் 9894540669என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், பொதுவாக 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

“விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான்” - பாரிவேந்தர் 

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Vijay entering politics is good says parivendhar

 

விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான் ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் வருவதை விட, புதியவர்கள் வருகையால் மக்களுக்கு நல்லது நடக்கும் என ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

கரூர் மாநகரில் இந்திய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சித்ரா என்பவரின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். விழாவை முடித்துக் கொண்டு புறப்பட்ட அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு, “விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான். மக்கள் நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பதவியில் இருந்தவர்களே வருவதை விடவும், நல்லவர்கள், சாமர்த்தியமானவர்கள், தேசப்பற்றுடன் இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும்” என்று பதிலளித்தார்.