தமிழக வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று (24.01.2022) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகன் சென்னை, கோயம்பேடு, , CMDA வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேலாண்மை இயக்குநர் சுன்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக வீட்டு வசதி வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பூச்சி எஸ். முருகன்! (படங்கள்)
Advertisment