Skip to main content

அமெரிக்கா செல்லும் கிராமத்து மாணவி.. உதவிக்கரம் நீட்டப்போவது யார்...?

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

ஒரு மாணவருவருக்கு ஏதோ ஒரு திறன் இருக்கும் ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி என்ற ஏழை மாணவிக்கு பேச்சு, கட்டுரை, அறிவியல், வினாடிவினா, போட்டித் தேர்வு, படிப்பு, கபடி பலவற்றிலும் சாதிக்கும் திறன் உள்ளது. தற்போது அவரது சாதனையாக இணைய வழியில் அவர் எழுதிய அறிவியல் சார்ந்த கட்டுரையை பாராட்டிய அமெரிக்கா நிறுவனம் அடுத்த போட்டிக்கு நேரில் அழைப்புக் கொடுத்துள்ளது. நேரில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் 10 ஆயிரம் டாலர் பரிசும் அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா செல்ல தான் வழியில்லை.

 

Who will extend the help ...?

 

ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த கருப்பையா கூலித் தொழிலாளி – அழகுவள்ளி தம்பதியின் மூத்த மகள் தான் ஜெயலெட்சுமி, அடுத்தது மகன் கோவிந்தராஜ். பல வருடங்களுக்கு முன்பே கருப்பையா இவர்களை விட்டு சென்றுவிட்டார். அம்மா அழகுவள்ளி தினக் கூலி வேலை செய்து வளர்த்து வருகிறார். குடும்ப வறுமை, சூழ்நிலைகளை நினைத்தே படிக்கவும், விளையாடவும் தொடங்கிய ஜெயலெட்சுமி ஆதனக்கோட்டை பள்ளியில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகள் பெற்றார்.

இந்த நிலையில் குடும்ப சூழ்நிலைகளை நினைத்தே அம்மாவுக்கும் மனிநிலை பாதிக்கப்பட்டது. அடுத்த இடி கஜா புயல் மூலம் இறங்கி குடியிருந்த ஓட்டு வீட்டையும் உடைத்துப் போட்டது. அதன் பிறகு ஜெயலெட்சுமியின் சித்தப்பா கண்ணன் வீட்டில் தங்கி இருந்து புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துக் கொண்டிருக்கிறார்.

தனது படிப்புச் செலவுக்காக திறனாய்வுத் தேர்வு எழுதி கிடைக்கும் சன்மானத்தை பயன்படுத்தி வருகிறார். பள்ளி மூலம் எந்த போட்டி என்றாலும் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து பள்ளிக்கும் பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பன்முகத்திறன் கொண்ட மாணவியை பாராட்டி கலை பண்பாட்டுத்துறை இளந்திரு விருது வழங்கி பாராட்டியுள்ளனர்.

 

Who will extend the help ...?

 

இந்தநிலையில் தான் அமெரிக்கா வாசிங்டனில் வசிக்கும் அருப்புக்கோட்டை புதுக்கோட்டை ராமலிங்கம் நடத்தும் கோ 4 குரு என்ற நிறுவனம் இணைய வழியில் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பெஸ்ட் பர்பார்மர் என்று தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு செய்யப்பட்ட ஜெயலெட்சுமியை தொடர்பு கொண்ட நிறுவனம் 2020 ல் அமெரிக்காவில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அழைப்புக் கொடுத்துள்ளனர். மேலும் அமெரிக்கா சென்று வர ஆகும் செலவை தாங்களே ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதற்கான செலவு ரூ. 1.69 லட்சம். அன்றாடம் செலவுக்கே திணறும் மாணவியால் எப்படி இவ்வளவு தொகையை திரட்ட முடியும் என்று கிராமத்தினரும், பள்ளி நிர்வாகமும் அமைதியாக உள்ளனர்.

 

Who will extend the help ...?

 

ஆனால் மாணவி ஜெயலெட்சுமி.. அடுத்தடுத்து என்னால் பல போட்டிகளில் சாதிக்க முடிந்தது. அப்படித்தான் அமரிக்காவில் நடந்த ஆன்லைன் கட்டுரைப் போட்டியிலும் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அங்கே நடக்கும் போட்டியிலும் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் போக வர ஆகும் செலவுக்கு பணம் இல்லை. பணம் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு கை நழுவிப் போகுமோ என்று திக் திக் என்று உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு உதவி செய்யும் நல்ல உள்ளங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உதவி செய்யும் நல்லவர்களை என்றைக்கும் மறக்கமாட்டேன். 

நிச்சயம் எனக்கு உதவிகள் செய்ய யாராவது முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உதவி செய்யவரும் நல் உள்ளங்கள் நான் படிக்கும் புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்திடமே தொடர்பு கொள்ளலாம் என்றார் நம்பிக்கையுடன்.

இந்த மாணவியின் சாதனை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் நமக்கு தெரிந்த சிலரிடம் இதுபற்றி சொன்ன போது.. செலிவனங்களில் பங்கெடுத்துக் கொள்வோம் என்றும் நேரில் அந்த மாணவியை பார்த்து முடிந்த உதவிகளை செய்வதாகவும் நிமல்ராகவன் என்ற இளைஞரும், அமெரிக்கா வரும் மாணவிக்கு அங்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கிறோம் என்று பெருமாள் என்பவரும் உறுதி அளித்துள்ளனர். அதேபோல சாதனை தமிழச்சியின் அடுத்த இலக்கை எட்ட உதவும் மனம் கொண்டவர்கள் உதவிகள் செய்யலாம்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.