Skip to main content

'இந்தியாவை வல்லரசாக்கும் தகுதி கிராம ஊராட்சிகளுக்கு உள்ளது' -ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணி பேச்சு!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு ஜனவரி 22,23,24 ஆகிய தேதிகளில் காந்திகிராமம் கே.வி.கே.அரங்கத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஊராட்சி செயலாளர் அகமது ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிறைவுநாள் விழாவிற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணி தலைமை தாங்கினார்.

 

Rural panchayats have the potential to make India great - Gangadharani

 

திண்டுக்கல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பயிற்சியாளர்களும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுமான வீரக்கடம்பு கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை உரையாற்றிய ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணி திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலெட்சுமி தலைமையில் கிராம ஊராட்சிகளுக்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளை செய்து உங்களிடம் நாங்கள் ஒப்படைத்துள்ளோம். அதை நீங்கள் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அந்த கனவை நிறைவேற்றும் பொறுப்பில் நீங்கள் உள்ளீர்கள். 

இந்தியா வல்லரசு ஆவதை கிராமங்களில் இருந்து தொடங்குங்கள். வெற்றி பெற்று தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியில் அமர்ந்துள்ள நீங்கள் சாதி, மத, இன வேறுபாடின்றி நலத்திட்ட உதவிகளை உங்கள் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குங்கள் என்றார். மத்திய மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை 100 சதவீதம் பெற்று உங்கள் ஊராட்சி மேம்பட சிறப்பாக பணியாற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

 

Rural panchayats have the potential to make India great - Gangadharani

 

ஊராட்சி சம்மந்தமான குறைகளை எந்த நேரத்திலும் தனது செல்போன் நம்பருக்கு அழைத்து நீங்கள் புகார் செய்யலாம் எனக்கூறி தனது செல்போன் நம்பரை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கினார். பயிற்சி வகுப்பில் தொப்பம்பட்டி ஒன்றியம் கொத்தையம் ஊராட்சியை சேர்ந்த துணைதலைவர் குப்பாத்தாள் (வயது 81) பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பயிற்சி வகுப்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சாந்தா, மகேந்திரன் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) வீரகடம்புகோபு, தொப்பம்பட்டி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பிரபுபாண்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்தரன், கணக்காளர் கமலக்கண்ணன் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு மற்றும் மாலையில் சிற்றுண்டி சிறப்பான முறையில் வழங்கப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.