Skip to main content

காந்தியை அவமானப்படுத்தியவர்களுக்கு ஆட்சியாளர்கள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை -கண்ணீர்விட்ட வைகோ!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை திருச்சியில் தொடர்ச்சியாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ கல்லூரி மாணவர்களிடமும், அரங்கு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இஸ்லாமும், தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ மாணவர்களை பார்த்து தம்பிகளே என்று கூறிய அவர், பின்னர் திடீரென மாணவர்களை தம்பிகளே என்று அழைக்க கூடாது என்று கருதி, தனக்கு வயது அதிகம் என்றும் தங்கள் வயதில் தனக்கு பேரன் இருப்பதாகவும் கூறினார்.

 

 The rulers have not even condemned those who insulted Mahatma - the sweetheart Vaiko!

 

உ.பி மாநிலத்தில் காந்தி நினைவு நாளில் அவருடைய உருவபொம்மையை தீயிட்டு எரிப்பதாகவும், துப்பாக்கியால் சுட்டு முழக்கங்களை எழுப்பியும் காலில் போட்டு மீதித்தும் அவமானப்படுத்தியவர்களுக்கு ஆட்சியாளர்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போது அவர் குரல் உடைந்து தடுமாறி கண்ணீர் விட ஆரம்பித்தது. அங்கே இருந்த மாணவர்களிடம் பெரிய அமைதியை ஏற்படுத்தியது. 

 

தோல்வியை பற்றி பேசுவதற்கு எனக்கு முழு தகுதி உள்ளது. ஏனெனில் அதிக தோல்விகளை சந்தித்தவன், நான் அரசியலில் தோற்றுள்ளேன், ஆனால் என் வாழ்வில் தோல்வியே கிடையாது. "நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.

 

மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன், என்றார்.

 

 The rulers have not even condemned those who insulted Mahatma - the sweetheart Vaiko!

 

இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே தான் உயிருடன் இருப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார். வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் , இளைஞர்களை அரசியலுக்கு அழைக்க வில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தை இளைஞர் தான் காப்பாற்ற வேண்டும். எனவே தான் அவர்களுக்கு வரலாற்றை எடுத்து கூறுகிறேன். உலகின் முதல் மொழி தமிழ் மொழி அதை காக்க ரத்தம் சிந்திய மாநகரம் திருச்சி என்று பேசினார். 

 

கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், தலைமை வகித்தார். செயலாளர் காஜா நஜீமுதீன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் முன்னிலை வகித்தனர். வைகோ அவர்கள் மனைவி மற்றும் திருச்சி மகப்பேரு மருத்துவர் மாநில மகளிர் அணி செயலாளர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் சேரன் மற்றும் சோமு உள்ளி கட்சியினரும் ஏராளமான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.