Skip to main content

சிங்கப்பூர் சாமியாரை பழித்தீர்த்த ருத்ர சாமியார்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Rudra preacher to blame the preacher of Singapore!

 

தமிழகத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர், சிங்கப்பூர் சென்று பக்தருக்கு ஆசி வழங்கிய இடத்தில், அம்மணமாக அடித்துவிரட்டப்பட்ட வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், ஊருக்கு வந்த தமிழக சாமியார், சிங்கப்பூர் சாமியாரை பழி தீர்ப்பதற்காக நடத்திய யாகமும் பயங்கர காமெடியில் முடிந்துள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தில் வசித்து வருபவர் ருத்ர சித்தர். (கடந்த வீடியோவில், ருத்ர சித்தரை கோவண சித்தர் என தவறுதலாக குறிப்பிட்டுள்ளோம். கோவண சித்தர் என்பவர் வேறொருவர் என்பது குறிப்பிடத்தக்கது) இவர், 15 வருடத்திற்கும் மேலாக, கார்காவயலில் கோவில் கட்டி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். இவரது உண்மையான பெயர் ராஜ்குமார் எனச் சொல்லப்படுகிறது. இவர் தற்போது ருத்ர சித்தராக அருள் பாவித்து வருகிறாராம். இவர் தொட்டால் எல்லா வியாதிகளும் குணமாகும் என சொல்லப்பட்டது. தன்னை பார்க்கவரும் பக்தர்களை வரிசையில் வரச்சொல்லும் இவர், ஒவ்வொருவருக்கும் விபூதி போட்டு அடிவயிற்றில் ஓங்கி ஒரு மிதி மிதிக்கிறார். பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்பும் அப்பாவி பக்தர்கள் சிலர், தாங்கமுடியாத வலியுடன் கண்ணீரை அடக்கிக்கொண்டு சிரித்தவாறு செல்கின்றனர். அது வலி வேற டிபார்ட்மென்ட் என தட்டுத் தடுமாறி வீடு போய் சேர்கின்றனர்.

 

இப்படி, அப்பாவி மக்களின் நம்பிக்கையை பெற்ற ருத்ர சித்தரின் கிராஃப் விறுவிறுவென எகிறியது. இதையடுத்து, உள்ளூர் பிரச்சனைகளை விட உலக பிரச்சனைகளை சரிசெய்வதிலேயே சாமியார் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் ருத்ர சாமியாருக்கு மவுஸ் கூடியது. அப்படித்தான், சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர், தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்ல எனக் கூறி, ருத்ர சாமியாரை தனது சொந்த செலவிலேயே சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதை நம்பி.. சிங்கப்பூருக்கு பறந்துள்ளார் ருத்ர சாமியார்.

 

எங்கே உனது சகோதரன்.. நான் சரியாக்குகிறேன்.. என ஜம்பமாக பக்தரின் வீட்டுக்குள் நுழைந்த சாமியாருக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி. அங்கே ஏற்கனவே சிங்கப்பூர் சாமியார் ஒருவர் நாற்காலியில் நிறைந்து இருந்துள்ளார். என்னடா பக்தா என்ன கோர்த்துவிட்டுட்ட என்கிற ரீதியில், பாவமாக பார்த்த ருத்ர சித்தரை, சிங்கப்பூர் சாமியார் புரட்டி எடுத்துள்ளார். இருவருக்குள்ளும் யார் ஒரிஜினல் சாமியார் எனும் போட்டி களைகட்ட, ருத்ர சாமியாருடன் சென்றிருந்த பெண் சீடர் பரிதவித்து போனார். ஒருகட்டத்தில், ருத்ர சாமியாரின் வேட்டியை உட்கார்ந்துகொண்டே உருவிய சிங்கப்பூர் சாமியார், அவரை அம்மணமாக்கி விரட்டியடித்தார்.

 

வாடா... நீ வாடா.. எங்க ஏரியாவுக்கு வாடா என்கிற தொனியில் சிங்கப்பூர் சாமியை திட்டிக்கொண்டே, அம்மணமாக காரில் பறந்தார் நம்ம ஊர் ருத்ர சாமியார். இந்த நிலையில், வெளிநாட்டில் நடந்த சம்பவம் தனது இமேஜை டேமேஜ் செய்துவிட்டதாக கருதிய ருத்ர சாமியார், இதை எப்படியாவது ரிப்பேர் செய்யவேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக, யாக யோசனையை கையில் எடுத்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி, யாக குண்டத்தில் இறங்கியுள்ளார். இதைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். நெருப்புக்கு நடுவில் சித்தர் இறங்கப்போகிறார்.. அதிசயங்கள் நடக்கப்போகிறது என காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நைஸாக யாக குண்டத்தில் இருந்த விறகுகளின் மீது சிறிது நேரம் சிரித்தவாறு நின்ற சித்தர், மெதுவாக டேக் ஆஃப் ஆனார். 

 

இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டதன் பின்னணியில், சிங்கப்பூர் சாமியாரை பழிதீர்க்கும் திட்டம் இருப்பதாகவே அந்த பகுதி மக்கள் கிசுகிசுக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

Next Story

மனைவியை வெட்டிவிட்டு தப்பியவர் விபத்தில் பலி 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
person passes away in accident near tanjore

தஞ்சையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. ஐ.ஓ.பி. மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ். வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் சுந்தர் கணேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றார். பிறகு யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும் விபத்தில் உயிரிழந்தது சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளனர். ஆனால், கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பால் டிப்போவில் இருந்த இருவரை ஏன் தாக்கினார் எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.