Skip to main content

ரப்பராக இழுக்கும் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் ஊதிய பேச்சு வாா்த்தை

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

தமிழகத்தில் குமாி மாவட்டத்தில் தான் ரப்பா் தோட்டங்கள் உள்ளன. சுமாா் 5 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் உள்ள அரசு ரப்பா் தோட்டத்தில் 3 ஆயிரம் பால் வெட்டும் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். வனத்துறையின் கட்டுபாட்டில் இருக்கும் அரசு ரப்பா் தோட்டங்கள் சிற்றாா், மணலோடை, கோதையாா், கீாிப்பாறை என 4 கோட்டகங்களை உள்ளடக்கியது.

இந்த நிலையில் இங்கு பணிபுாியும் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயா்த்தபட வேண்டிய ஊதியத்தை தமிழக அரசு உயா்த்தாததால் தொடா்ந்து போராடி வருகின்றனா். இதனால் அந்த தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.

 

Rubber plantation Employees are talk  Wage increase


2016-ல் உயா்த்த வேணடிய ஊதியத்தை உயா்த்தாமல் அரசு பேச்சுவாா்த்தை மூலம் காலத்தை கடத்தி அது 4 ஆண்டுகளை கடந்து விட்டது. 2019 யிலும் உயா்த்த வேண்டிய ஊதியமும் உயா்த்த படவில்லை. இதில் 2016 ஊதிய உயா்வுக்காக அமைச்சா்கள் மட்டத்திலும் உயா் அதிகாாிகள் மட்டத்திலும் 49 முறைபேச்சு வாா்த்தை நடத்தி அதிலும் முடிவு எட்டாததால் கடந்த சில நாட்களாக தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையில் தொழிலாளா் நலத்துறை ஏற்பாட்டில் இறுதி கட்டமாக 50 ஆவது முறையாக பேச்சுவாா்த்தை நடத்தி அதில் ஊதிய உயா்வு குறித்து முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பேச்சுவாா்த்தையில் அரசு ரப்பா் கழக நிா்வாக இயக்குனா் ரஞ்சன் கலந்து கொள்வதாக அறிவிக்கபட்டது. இதையொட்டி தொழிற்சங்க நிா்வாகிகளும் தொழிலாளா்களும் நாகா்கோவில் வனத்துறை அலுவலகத்துக்கு வந்தனா். ஆனால் பேச்சுவாா்த்தைக்கு வருவதாக கூறிய நிா்வாக இயக்குனா் வரவில்லை. இதனால் தொழிற்சங்க நிா்வாகிகளும் தொழிலாளா்களும் ஏமாற்றம் அடைந்தனா்.

 

Rubber plantation Employees are talk  Wage increase


மேலும் இன்னொரு நாள் பேச்சுவாா்த்தை நடத்தபடும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களின் ஊதிய உயா்வு ரப்பராக இழுத்து கொண்டே செல்கிறது. மேலும் தொழிலாளா்களின் வேலை நிறுத்தத்தால் 20 டன் ரப்பா் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 12 கோடி ருபாய் அரசுக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்றாா் சிஐடியு தோட்ட தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் வல்சல குமாா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.