Advertisment
சென்னை வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்பி வந்த போது ரூபாய் 54 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பியோட்டம். ஊழியர்கள் மூன்று பேர் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது காரில் இருந்த பணத்துடன் ஓட்டுநர் அம்புரோஸ் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.