Skip to main content

கவரிங் நகைகளை வைத்து ரூ.50 லட்சம் மோசடி... வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது

Published on 05/06/2020 | Edited on 05/06/2020


திருவெறும்பூர் ஜனா என்கிற வங்கியில் 250 பவுன் கவரிங் நகையை வைத்து ரூ.50 லட்சம் மோசடி செய்த 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஜனா என்கிற வங்கி இயங்கி வருகிறது. இங்கு மகளிர் சுய உதவிக்குழு பெண்ளுக்கு கடன், அடமான கடன், வீட்டுப்பத்திரம் அடமான கடன், நகைகள் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 


இந்த வங்கியில் கடந்த மாதம் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடமானம் வைத்த நகைக்கு வட்டி கட்ட வந்துள்ளார்.

அப்போது நகை மதிப்பீட்டாளராக இருந்த சிவந்தி லிங்கம், இன்னொரு நகைக்கு வட்டி கட்டாமல் உள்ளது அதை எப்போது மீட்கப் போகிறீர்கள் எனக் கேட்டார்.

அதற்கு வாடிக்கையாளர் அது என்னுடையதல்ல ஏற்கனவே இங்கு நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியன் எனது பெயரில் வைத்துள்ளார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து கிடப்பில் இருந்த அந்த அடமான நகைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட போது அவையனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிவந்தி லிங்கம், புதியதாக வந்த கிளை மேலாளர் கெல்வின் ஜோஸ்வா ராஜிடம் நடந்த விபரத்தைத் தெரிவித்தார்.

பின்னர் வங்கியில் இன்னும் இதுபோன்று போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டதா எனத் தணிக்கை செய்யப்பட்டது. இதில் 250 பவுன் மதிப்பில் போலி நகைகளை 80 வாடிக்கையாளர் பெயரில் கள்ளத்தனமாக அவர்களுக்குத் தெரியாமல் போலி நகை அடமானம் ரூ 50 லட்சம் வரை  மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 

 


இதையடுத்து கிளை மேலாளர் கெல்வின் ஜோஷ்வா ராஜ் திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்த போது, இந்த வழக்கு மாவட்டப் பொருளாதார குற்றப் பிரிவு போலீசாருக்குச் சென்றது.

இது குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சிவசுப்ரமணியன் தலைமையில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் உஷாநந்தினி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் போலி அடமான நகைகளின் விபரம் வெளிச்சத்திற்கு வந்தது.

திருவெறும்பூர் கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்தவர் பிரவீண்குமார் மற்றும் நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியன் சேர்ந்து வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து சுமார் இரண்டு வருட காலமாக போலி நகைகளை வைத்து மோசடி பணம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக வங்கியில் கலெக்சன் பிரிவு, கடன் வழங்குதல் பிரிவுகளில் வேலை பார்க்கும் யோகராஜ், வடிவேல், ராஜேந்திரன், சிலம்பரசன் ஆகிய 4 பேரும் உதவியாக இருந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு கடன் ஏற்பாடு செய்யும்போது வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நகை அடமானம் வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் லாவகமாகப் பேசி கவரிங் நகைகளை வாடிக்கையாளர் பெயரிலே அடமானம் வைத்துள்ளனர் இந்த மோசடி கும்பல்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 வாடிக்கையாளர்களின் பெயரில் 250 பவுன் வரை அடமானம் வைத்து ரூ 50 லட்சம் மோசடி செய்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு நகை மதிப்பீட்டாளார் பாலசுப்ரமணியனும், கிளை மேலாளர் பிரவீன் குமாரும் வேறொரு கிளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

http://onelink.to/nknapp


இதனால் புதியதாக வந்த கிளை மேலாளர், மற்றும்  நகை மதிப்பீட்டாளரால் இந்த உண்மை வெளியே வந்தது.

இந்த மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் பிரவீன் குமார், யோகராஜ், வடிவேல், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், சிலம்பரசன் என 6 பேர் மீது வழக்குப் பதியபட்டது.

இதில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த கடந்த மாதம் பாலசுப்பிரமணியன் இறந்துவிட்ட இந்நிலையில் மீதமுள்ள 5 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய மோசடி வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.