k

திருக்கோவில்களில் சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், பணத்தோடு 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட இருக்கிறது. ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment