Skip to main content

“நாங்குநேரியை விட்டுக்கொடுத்ததற்காக ரூ.20 கோடி கைமாறியது!” -திமுக-காங்கிரஸ் மீது ராஜேந்திரபாலாஜி காட்டம்!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

நாங்குநேரி – களக்காடு ஒன்றியத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது -
“நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக் கொடுத்ததில் 20 கோடி ரூபாய் கைமாறியுள்ளது. தொகுதிவிட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்குதான் பொருந்தும். ராகுல்காந்தி, சோனியா,  அழகிரி போன்ற முன்னணி தலைவர்கள் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்தத் தொகுதியில் நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர் வார்டு விட்டு வார்டு  நின்றாலே யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். ஒரு மாவட்டத்தைத் தாண்டி வேறு மாவட்டத்திற்கு வந்து போட்டியிடுவதை நாங்குநேரி வாக்காளர்கள் விரும்பவில்லை.


 

 "Rs. 20 crores transferred to Nankeneri for giving up!" Rajendra Balaji

 

இங்கே போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம்.  குடியிருப்பது சென்னையில். மாவட்ட தலைவர் பதவி வாங்கியது காஞ்சிபுரம் மாவட்டத்தில். தற்போது நாங்குநேரியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று காங்கிரஸ் வேட்பாளர் திட்டமிட்டுள்ளார். இவர் வெளிநாட்டில்தான் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும், இதில் 200 கோடி ரூபாய் தேர்தலில் செலவழிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.

 

 "Rs. 20 crores transferred to Nankeneri for giving up!" Rajendra Balaji

 

முன்பு இருந்த தேசிய காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. காங்கிரஸ் கட்சி பணத்திற்கு விலை போய்விட்டது காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் மனு கொடுக்க சென்னைக்குதான் செல்ல வேண்டும். ஒரு முதியோர் மனு கொடுக்க வேண்டும் என்றாலும்கூட சென்னைக்குதான் செல்ல வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் வீடு சென்னையில் எங்கு இருக்கிறது? ஆதார் கார்டு எங்கு இருக்கிறது? ரேசன் கார்டு எங்கு இருக்கிறது? என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. சாதாரண மக்கள் அவரைப் பார்க்கவே முடியாது. வெற்றி பெற்றால் நாங்குநேரியில்தான் வசிப்பேன் என்று வசந்தகுமார் வாக்குறுதி கொடுத்தார்.  ஆனால்.. தொகுதி பக்கமே வரவில்லை. சென்னையில் அவர் தொழிலைத்தான் பார்த்தார். இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற எம்பி இன்னும் நன்றி சொல்லக்கூட ஊருக்குள் வரவில்லை. ஒருமுறை ஓட்டு போட்டு 5 வருடங்கள் கஷ்டப்படாதீர்கள்.” என்றார்.  

 

hh


அந்த இடத்திலேயே ஆக்‌ஷன்!

நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக தெற்குகாடுவெட்டி கிராமத்தில்  திண்ணைப் பிரச்சாரத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேற்கொண்டபோது, அங்கு வசிக்கும் மக்கள் “அரசுப் பேருந்து திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக பெரிதும் அவதிப்படுகிறோம். தொடர்ந்து அரசுப் பேருந்தினை இந்தப் பகுதியில் இயக்க வேண்டும்.”என்று கோரிக்கை வைத்தனர். உடனே, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை செல்போனில் தொடர்புகொண்ட ராஜேந்திரபாலாஜி,  அந்த கிராம மக்களின் கோரிக்கை குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து கிராம மக்களும் போக்குவரத்துதுறை அமைச்சரிடம் செல்போனில் பேசினார்கள். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து உடனடியாக இயக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் உறுதியளித்திட, கிராம மக்கள் கைதட்டினார்கள்.  

ஆளும்கட்சி ஆயிற்றே! மக்கள் கேட்டதெல்லாம் உடனே கிடைத்துவிடும்! இதனை,  தேர்தல் நடத்தை விதிமீறல் என்றெல்லாம் ‘சின்னப்புள்ளத்தனமாக’ யாரும் குறை சொல்லவா முடியும்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.