Skip to main content

“மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ .1007 கோடி வங்கிக்கடன் இணைப்பு” -  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Rs 1007 Crore Bank Loan Linkage for Women Self Help Groups says MRK Panneerselvam

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் தனியார் பள்ளியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டம் வாயிலாக 993 சுய உதவி குழுக்களுக்கு ரூ81.46 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் இணைப்புகளை வழங்கி சுய உதவிக் குழுக்களுக்கு மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களையும் வழங்கினார். அப்போது தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் பொருளாதாரத்தில் மேன்மையடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இலவச பேருந்து பயணத் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு புதுமைப்பெண் திட்டம். போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் குழுக்கள் கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 15,400 சுய உதவிக் குழுவினர்களும் நகர்ப்புறங்களில் 7621 சுய உதவிக் குழுக்களும் அமைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம்.  ஊராட்சி அளவிலான கட்டமைப்புகள் என மாவட்டத்தில் 19526 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதுவரை 18,217 சுய உதவி குழுவிற்கு வங்கிகளின் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

2023 - 24 ஆம் ஆண்டிற்கான இலக்கான 22956 சுய உதவி குழுக்களுக்கு ரூ 1302 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 18,217 சுய உதவி குழுக்களுக்கு ரூ.1007 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.  இந்த நிதியை பயன்படுத்தி மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் சார்ந்த விவசாயம் சாராத தொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை வலுப்படுத்தியும் மேம்பாடு பெற்று அதன் மூலம் தங்களது குடும்ப வாழ்க்கை தரத்தினை சேமித்து உள்ளனர்” என பேசினார்.

நிகழ்வில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மகளிர் திட்ட இயக்குநர் சுருதி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.