Rs. 1 crore worth of invalid notes confiscated

சேலம் மாவட்டம்அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர்சபீர். இவர் தனது நண்பர்களான பாலாஜி மற்றும்கோகுலநாதன்உள்ளிட்டோர் உடன் சேர்ந்து கூட்டாகரியல்எஸ்டேட்தொழில் செய்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பின்போது இவர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.இதனைத்தான் மாற்றிக்கொடுப்பதாகக்கூறிசபீர்தனது பங்குதாரர்களிடம் செல்லாத ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய்நோட்டுகளைவாங்கியதாகக்கூறப்படுகிறது. இருப்பினும் பல ஆண்டுகள் கடந்தும் செல்லாத இந்த ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை தற்போது வரைசபீர்மாற்றிக் கொடுக்கவில்லைஎனச்சொல்லப்படுகிறது.

இதனிடையேசபீரிடம்பணத்தைக்கொடுத்தவர்களில் ஒருவரான பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். அதே சமயம் பணம்கொடுத்துப்பல ஆண்டுகளாகியும்பணத்தைத்திருப்பிக் கொடுக்காதது குறித்துசபீரிடம்கோகுலநாதன்கேட்டுள்ளார். அப்போது, “அந்தப் பணம் தன்னிடம் அப்படியே இருக்கிறது. இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளேன். அந்தப்பணத்தைக்கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்”எனக்கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்துகோகுலநாதன்இது குறித்துஅம்மாபேட்டைகாவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “சபீர்எனபவர்மாசிநாயக்கன்பட்டியில்உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

Rs. 1 crore worth of invalid notes confiscated

Advertisment

அதனைத்தொடர்ந்துஇந்தப் புகாரின் பேரில்போலீசார்மேற்கொண்ட சோதனையில்சபீரின்வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய்நோட்டுகளைப்பறிமுதல் செய்தனர். மேலும் செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய்நோட்டுக்களைப்பதுக்கி வைத்திருந்தசபீரைகைது செய்தனர். இதனையடுத்துசபீரைநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு நோட்டுகளையும்போலீசார்நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.