Advertisment

சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட ஆர்.பி.உதயகுமார்

RP Udayakumar who besieged the toll booth

சுங்கச்சாவடியில் அமலாகும் புதிய கட்டண விதிகளை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் இன்று முதல் அமலாவதை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தி வருகிறது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகசென்று வருகின்றன. கப்பலூர் பகுதியில் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டுள்ளது.

Advertisment
madurai admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe