திருந்தி வாழப்போவதாக போலீசிடம் மனு அளித்த பிரபல ரவுடி

police

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கைப்புள்ள ராஜி (26). இவர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார். அதில், தான் திருந்தி வாழப்போவதாக கூறியுள்ளார்.

கைப்புள்ள ராஜி மீது 5 கொலை வழக்கு உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறியதையடுத்து இந்த மனுவை அவர் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

petition police rowdy villupuram
இதையும் படியுங்கள்
Subscribe