ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் கைது! 

Rowdy Baby Surya, Sikander arrested!

டிக் டாக் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா என்பவர். இவருக்கு சிக்கந்தர் எனும் ஆண் நண்பர் ஒருவர் உண்டு. டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு சூர்யா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பி அதில் பல வீடியோக்களை பதிவேற்றிவந்தார். சூர்யாவும், அவரது ஆண் நண்பரான சிக்கந்தர் என்பவரும் இணைந்து பல்வேறு வீடியோக்களை பதிவேற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் தனிதனியே யூடியூப் சேனல்களும் வைத்து அதிலும் வீடியோக்களை பதிவேற்றிவருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுவந்தனர்.

Rowdy Baby Surya, Sikander arrested!

இந்நிலையில் இவர்கள் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக பெண் ஒருவர், சென்னை சைபர் கிரைம் போலீஸிலும், கமிஷனர் அலுவலகத்திலும், தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தார். அதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீஸார் ரவுடி பேபி சூர்யாவையும், சிக்கந்தரையும் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர்.

Coimbatore police
இதையும் படியுங்கள்
Subscribe