Skip to main content

தெருவில் நடந்து சென்ற பெண்ணைக் கடத்தி வன்கொடுமை; ரவுடி கைது 

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

Rowdy arrested in tuticorin

 

தூத்துக்குடியின் சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்ற கட்டை முருகன் (27). இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்ட்டிலும் வருபவர். இவரது நண்பர் அழகேசபுரத்தைச் சேர்ந்த கோகுல்ராம். இருவரும் தாளமுத்து நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த 40 வயதுடைய பெண்ணை கத்தியைக்காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிக் கடத்திச் சென்றவர்கள், 5 குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணை தருவைக்குளம் கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்த கட்டை முருகன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் அந்தப் பெண்ணை அவரது வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

 

இதனிடையே கோகுல் ராமும் அந்தப் பெண்ணின் செல்லில் தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைக்கவே அவர் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கோகுல் ராம் அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் தெரியவரவே கட்டை முருகன், கோகுல் ராம் ஆகிய இருவரும் தலைமறைவானர்.

 

தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன்,  உத்தரவின் அடிப்படையில் டவுண் டி.எஸ்.பி. சத்ய ராஜ் தலைமையிலான தனிப்படையினர் தலைமறைவான இருவரையும் தீவிரமாகத் தேடினர். இந்நிலையில், கட்டை முருகன், கோகுல் ராம் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின்பு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

மாவட்டத்தில் ரவுடித்தனம், பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.